சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் - கோவை சவுத் ரோட்டரி கிளப் நிதியுதவி

தமிழகத்தில் சர்க்கரை நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் வழங்கியது. இந்தக் காசோலை இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.


கோவை: தமிழகம் முழுவதும்‌ சர்க்கரை நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இன்சுலின் மருந்து மற்றும் அதற்கான உபகரணங்கள், இதயங்கள் அறக்கட்டளை சார்பில் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏழை, எளிய குழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து மீட்டெடுக்கும் வகையிலான நிகழ்ச்சி ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கோவை மருத்துவ கல்லூரி அருகே நடைபெற்றது.



அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் வகையில் இன்சுலின் மருந்துகளுக்கான 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இதயங்கள் அறக்கட்டளைக்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் நிர்வாகிகள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இதயங்கள்‌ அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன், ரோட்டரி மூலம் மேற்கொள்ளப்பட்ட இவ்வுதவிக்கு நன்றி. இன்சுலின் தேவைப்படும் 70 குழந்தைகளுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் ரோட்டரி சார்பில் உதவி அளிக்கப்பட உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் ராஜ்மோகன் நாயர் ரோட்டரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...