திருப்பூர் அருகே காலி கேஸ் டேங்கர் லாரியில் தீவிபத்து - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது.



திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கேஸ் சேமிப்பு கிடங்கில் கேஸ் இறக்கிவிட்டு, சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. ஈரோடு பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி (வயது38) அந்த லாரியை ஓட்டிச் சென்றார்.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தின் அருகில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தியபோது, டிரைவர் இருக்கையின் இடது புறம் தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டார்.



அப்போது, தீ மளமளவென பரவியதால் அச்சமடைந்த டிரைவர் ரவி, வண்டியிலிருந்து எட்டிக் குதித்து தப்பியோடினார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி மற்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையின் இரண்டு வாகனங்களில் வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது.



கேஸ் சிலிண்டர்கள் எதுவும் லாரியில் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...