பொள்ளாச்சியில் சிலுவைப் பாதை தியானம் - ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புனித வெள்ளியை ஒட்டி பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: இயேசு கிறிஸ்துவை கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாள் கிருஸ்வத வழிபாட்டு ஆண்டில் முக்கிய நாளான இன்று புனித வெள்ளியாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.



பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் மதியம் 12 மணியளவில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இயேசு மரித்த நாள் துக்கமான நாள்தான் இருந்தாலும் மூன்று தினங்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்து சந்தோசமான நாளாக மாறும் என இயேசு கூறினார்.



அந்த மகிழ்ச்சியோடு இந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுவதாகவும், அவருடைய ரத்தங்களால் தங்கள் பாவங்கள் நீங்கிவிட்டதாக நம்புவோம் என பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...