நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை - பிரதமர் வருகையையொட்டி முன்னேற்பாடு!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வரும் 9ஆம் தேதி பிரதமர் மோடி வருகிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்திக்கிறார்.


நீலகிரி: நாட்டில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக 9-ந் தேதி காலை 7:15 மணியளவில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.



அங்கு வாகன சவாரி செல்லும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக 9.35 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வருகிறார்.

அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்தித்து காட்டு யானைகளை பிடிப்பது, அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அவர்களின் குறைகளையும் கேட்கிறார்.

பின்னர், டி 23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய 3 வேட்டை தடுப்பு காவலர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபன்ட் மிஸ்பரர் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் அதில் இடம் பிடித்த ரகு மற்றும் பூமி ஆகிய யானை குட்டிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் சிறப்பாக செயல்பட்ட 12 புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்கள் மற்றும் 8 முன் களப்பணியாளர்களை பிரதமர் கௌரவிக்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடிக்கு வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக மைசூர் செல்கிறார்.



பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில், நிகழ்ச்சியை முடித்தபின் பிரதமர் மோடி மசினகுடியிலிருந்து ராணுவ ஹெலிகேப்டர் மூலம் மைசூர் செல்லவுள்ளார். இதற்கான ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை இன்று நடைபெற்றது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...