நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை - பிரதமர் வருகையையொட்டி முன்னேற்பாடு!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வரும் 9ஆம் தேதி பிரதமர் மோடி வருகிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்திக்கிறார்.


நீலகிரி: நாட்டில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக 9-ந் தேதி காலை 7:15 மணியளவில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.



அங்கு வாகன சவாரி செல்லும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக 9.35 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வருகிறார்.

அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்தித்து காட்டு யானைகளை பிடிப்பது, அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அவர்களின் குறைகளையும் கேட்கிறார்.

பின்னர், டி 23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய 3 வேட்டை தடுப்பு காவலர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபன்ட் மிஸ்பரர் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் அதில் இடம் பிடித்த ரகு மற்றும் பூமி ஆகிய யானை குட்டிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் சிறப்பாக செயல்பட்ட 12 புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்கள் மற்றும் 8 முன் களப்பணியாளர்களை பிரதமர் கௌரவிக்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடிக்கு வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக மைசூர் செல்கிறார்.



பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில், நிகழ்ச்சியை முடித்தபின் பிரதமர் மோடி மசினகுடியிலிருந்து ராணுவ ஹெலிகேப்டர் மூலம் மைசூர் செல்லவுள்ளார். இதற்கான ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை இன்று நடைபெற்றது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...