உடுமலையில் தலைக்கவசம் அணிவது குறித்து பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு!

பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி வளாகம் முன்பு மாணவிகள் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோருக்கு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில், உடுமலையில் உள்ள பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவியர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் மாணவியர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த சின்னங்கள் அடங்கிய பலகையை வைத்துக்கொண்டு, பள்ளியின் முன்பு வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்று வது, இரண்டு சக்கர வாகனங்களில் அதிக நபர்கள் பயணம் செய்வதை தவிர்ப்பது, மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுவது குறித்து, வாகன ஓட்டுனர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியை விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...