கே.ஜி பவுண்டேஷன் சார்பில் ஆளுமை விருது வழங்கும் விழா - தமிழக ஆளுநர் பங்கேற்பு

கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, Dynamic Indian of Millenium, Personality of the Decade என இரண்டு விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கினார்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி. அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

கோவை கே.ஜி மருத்துவமனை மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல் உள்ளிட்ட கே.ஜி குடும்ப நிறுவனங்கள் சார்பில் கே.ஜி பவுண்டேஷன் அமைப்பில் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'Dynamic Indian of Millenium', 'Personality of the Decade' என இரண்டு விதமான விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு விருதுகள் இந்தாண்டு வழங்கப்பட்டது.

கே.ஜி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர்.ஜி.பக்தவச்சலம், கே.ஜி மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...