கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் கேஸ் வெளியேறியதால் பரபரப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற கோவை சரவணம்பட்டியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் திடீரென சத்தத்துடன் கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



கோவை: கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்விற்கு ஆளுநர் வருகை புரிந்தவுடன், தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.



அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந்த ஏசி மிஷினில் இருந்து திடீரென சப்தத்துடன் கேஸ் வெளியேறியுள்ளது.

இதனால் அங்கிருந்த மாணவர்கள் பதற்றத்திற்குள்ளான நிலையில் உடனடியாக ஏசி மிஷின் நிறுத்தப்பட்டு அங்கிருந்த மாணவர்கள் வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்தால் அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...