இரண்டே ஆண்டில் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக உள்ளது..! - கோவையில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை சந்திக்கின்ற அரசாக திமுக உள்ளதாக விமர்சனம் செய்தார்.



கோவை: இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை சந்திக்கின்ற அரசாக திமுக உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியேற்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக கோவைக்கு வருகை புரிந்ததற்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்சுணன் உள்ளிட்டோரும், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.



இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அம்மா(ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து வருகிறோம் எனவும், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி இருபெரும் தலைவர்கள், பொதுச்செயலாளர் பதவியில் இருந்த நிலையில் எளிய தொண்டனாக இருந்த நான், பதவி ஏற்றுள்ளேன். ஆனால் திமுகவில் அப்படி வர முடியாது, வாரிசுகள் மட்டுமே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே. வேறு எந்த கட்சியிலும் எளிய தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியாது.



திமுக ஒரு கம்பெனி போல் செயல்பட்டு வருவதாகவும், திமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியிலிருந்தபோது பொற்கால ஆட்சியை கொடுத்ததாகவும், இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக மாறியுள்ளதாக விமர்சனம் செய்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...