இரண்டே ஆண்டில் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக உள்ளது..! - கோவையில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை சந்திக்கின்ற அரசாக திமுக உள்ளதாக விமர்சனம் செய்தார்.



கோவை: இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை சந்திக்கின்ற அரசாக திமுக உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியேற்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக கோவைக்கு வருகை புரிந்ததற்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்சுணன் உள்ளிட்டோரும், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.



இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அம்மா(ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து வருகிறோம் எனவும், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி இருபெரும் தலைவர்கள், பொதுச்செயலாளர் பதவியில் இருந்த நிலையில் எளிய தொண்டனாக இருந்த நான், பதவி ஏற்றுள்ளேன். ஆனால் திமுகவில் அப்படி வர முடியாது, வாரிசுகள் மட்டுமே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே. வேறு எந்த கட்சியிலும் எளிய தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியாது.



திமுக ஒரு கம்பெனி போல் செயல்பட்டு வருவதாகவும், திமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியிலிருந்தபோது பொற்கால ஆட்சியை கொடுத்ததாகவும், இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக மாறியுள்ளதாக விமர்சனம் செய்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...