உடுமலை அருகே ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13.75 சவரன் நகை கொள்ளை!

உடுமலை அருகே பட்டப்பகலில் ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 13.75 சவரன் நகைகள் கொள்ளைய அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பட்டப்பகலில் ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13.75 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டி செல்லாண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தரணி(36). இவரது கணவர் பாலசுப்பிரமணியம். இருவரும் மலையாண்டி கவுண்டனூரில் ஸ்வீட் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே வழக்கம் போல் இருவரும் இன்று கடைக்கு சென்ற நிலையில், தரணி மட்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள், பீரோவில் இருந்த 13.75 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தரணி, உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...