பல்லடத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தம்! - பரபரப்பு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்துவது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இளம் வழக்கறிஞர்கள் வெளிநடப்பு செய்ததால் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது.


திருப்பூர்: பல்லடத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 2021 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக உள்ள 84 வழக்கறிஞர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் எனவும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை புதிதாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் வாக்களிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இதன் காரணமாக, மூத்த வழக்கறிஞர் மகேஷ் என்பவர் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்லடம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மார்ச் 31 2023 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்களையும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு கோரப்பட்டது.



பெருவாரியான வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவளித்த நிலையில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வழக்கறிஞர்கள் சிலர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக சங்கத்தில் பைலாவை யாரும் பின்பற்றவில்லை. இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பளிக்காததால் பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. மேலும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...