பல்லடத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தம்! - பரபரப்பு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்துவது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இளம் வழக்கறிஞர்கள் வெளிநடப்பு செய்ததால் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது.


திருப்பூர்: பல்லடத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 2021 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக உள்ள 84 வழக்கறிஞர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் எனவும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை புதிதாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் வாக்களிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இதன் காரணமாக, மூத்த வழக்கறிஞர் மகேஷ் என்பவர் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்லடம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மார்ச் 31 2023 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்களையும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு கோரப்பட்டது.



பெருவாரியான வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவளித்த நிலையில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வழக்கறிஞர்கள் சிலர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக சங்கத்தில் பைலாவை யாரும் பின்பற்றவில்லை. இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பளிக்காததால் பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. மேலும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...