தொழிலுக்கு இடையூறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை.! - போசியா அமைப்பு வலியுறுத்தல்

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து பொருட்களை கோவைக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில் செய்பவர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல என்று போசியா அமைப்பு கண்டித்துள்ளது.


கோவை: நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கோவை நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.



இதில் ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், சிவசண்முககுமார், சுருளிவேல் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில், ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தொழில்துறையினர் சார்பில், மத்திய அரசிடம் எடுத்துக் கூறியும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மாநில ஜிஎஸ்டி செலுத்துவது தொடர்பாக குறு, சிறு தொழில்முனைவோர் மத்தியில் உள்ள சிறு குறைகளை கண்டறிவதும் அதற்காக பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் தொடங்கியுள்ளனர்.



இந்நடவடிக்கை தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையாக தொழில் செய்து வரும் நிலையில், அவற்றை முடக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து ஏராளமான பொருட்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில்முனைவோருக்கு நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் துறை சார்ந்த உயரதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...