காதலனுடன் சென்ற மகளை மீட்டு கொடுங்கள்..! - முன்னாள் ராணுவ வீரர் சாலையில் படுத்து போராட்டம்!

துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, கோவை - மேட்டுப்பாளையம் சாலையை நடுவே படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: துடியலூர் அருகே காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, மகளிர் காவல் நிலையம் முன்பு சாலையில் படுத்து முன்னாள் ராணுவ வீரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் கோவை - மேட்டுப்பாளையம் சாலையை மறித்து எனக்கு நியாயம் வேண்டும் என்று கூறி படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் விசாரணை நடத்தினார்.



விசாரணையில் அவர், கோவை தொப்பம்பட்டி அருணாநகர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பதும், ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு திரும்பியவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரது மகள், வீட்டின் அருகிலுள்ள வாலிபரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார் என்பதும், தற்போது மகள் காதலனுடன் இருப்பதாகவும் தெரியவந்தது. இதனை கேட்க சென்ற தன்னை அடித்து விட்டதாகவும், தனது மகளை மீட்டுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திடீரென சாலையை மறித்து ஒருவர் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...