காதலனுடன் சென்ற மகளை மீட்டு கொடுங்கள்..! - முன்னாள் ராணுவ வீரர் சாலையில் படுத்து போராட்டம்!

துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, கோவை - மேட்டுப்பாளையம் சாலையை நடுவே படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: துடியலூர் அருகே காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, மகளிர் காவல் நிலையம் முன்பு சாலையில் படுத்து முன்னாள் ராணுவ வீரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் கோவை - மேட்டுப்பாளையம் சாலையை மறித்து எனக்கு நியாயம் வேண்டும் என்று கூறி படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் விசாரணை நடத்தினார்.



விசாரணையில் அவர், கோவை தொப்பம்பட்டி அருணாநகர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பதும், ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு திரும்பியவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரது மகள், வீட்டின் அருகிலுள்ள வாலிபரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார் என்பதும், தற்போது மகள் காதலனுடன் இருப்பதாகவும் தெரியவந்தது. இதனை கேட்க சென்ற தன்னை அடித்து விட்டதாகவும், தனது மகளை மீட்டுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திடீரென சாலையை மறித்து ஒருவர் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...