காதலனுடன் சென்ற மகளை மீட்டு கொடுங்கள்..! - முன்னாள் ராணுவ வீரர் சாலையில் படுத்து போராட்டம்!

துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, கோவை - மேட்டுப்பாளையம் சாலையை நடுவே படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: துடியலூர் அருகே காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, மகளிர் காவல் நிலையம் முன்பு சாலையில் படுத்து முன்னாள் ராணுவ வீரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் கோவை - மேட்டுப்பாளையம் சாலையை மறித்து எனக்கு நியாயம் வேண்டும் என்று கூறி படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் விசாரணை நடத்தினார்.



விசாரணையில் அவர், கோவை தொப்பம்பட்டி அருணாநகர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பதும், ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு திரும்பியவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரது மகள், வீட்டின் அருகிலுள்ள வாலிபரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார் என்பதும், தற்போது மகள் காதலனுடன் இருப்பதாகவும் தெரியவந்தது. இதனை கேட்க சென்ற தன்னை அடித்து விட்டதாகவும், தனது மகளை மீட்டுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திடீரென சாலையை மறித்து ஒருவர் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...