எம்பி தேர்தலில் 40 தொகுதிகளை கைப்பற்ற பாடுபடுங்கள்..! - தாராபுரத்தில் திமுக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரம் நகர ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிப் பெற்ற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரம் நகர ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, தாராபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கே எஸ் தனசேகர், மாநில மகளிரணி செயலாளர் சத்யா பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழக செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறையைபோல 40க்கு 39 என்ற உறுப்பினர்களைபோல் இல்லாமல் இந்த முறை நடப்பதற்கு 40 என்ற இலக்கை பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நமக்கெல்லாம் உத்தரவிட்டுள்ளார்.



அதன்படி, தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக மாநில நெசவாளர் அணி செயலாளர் பொள்ளாச்சி நாகராஜ் நியமிக்கப்பட்டு, அவர் தலைமையில் ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் தவறாமல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 20 சதவீதத்திற்கும் குறையாமல் உறுப்பினர்களை வரும் 20 நாட்களுக்குள் அந்தந்த பகுதி நகரச் செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் தலைமையில் கிளைக் கழக உறுப்பினர்கள் கட்டாயமாக சேர்க்க நாளை முதல் தீவிரமாக ஈடுபட வேண்டும், என்றார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...