பொள்ளாச்சியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் இந்திரா நகர் கிறிஸ்துவ ஆலய பங்குத்தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் தலைமையில், புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி முதல் புனித லூர்து அன்னை ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற குருத்தோலை ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒசானா பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் இந்திரா நகர் கிறிஸ்துவ ஆலய பங்குத்தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் தலைமையில், புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி வளாகத்திலிருந்து புனித லூர்து அன்னை ஆலயம் வரை கிறிஸ்துவ மக்கள் தங்களது கைகளில் குருத்தோலைகளை ஏந்தி பாடல்களை பாடி ஊர்வலமாக ஆலயத்திற்குள் சென்றனர்.



தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தவ முயற்சிகளையும் உபவாசமும் மேற்கொண்டனர்.

இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுவதால் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வரை சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற உள்ளது என ஆலய பங்குத்தந்தை தெரிவித்தார்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...