பொள்ளாச்சியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் இந்திரா நகர் கிறிஸ்துவ ஆலய பங்குத்தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் தலைமையில், புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி முதல் புனித லூர்து அன்னை ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற குருத்தோலை ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒசானா பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் இந்திரா நகர் கிறிஸ்துவ ஆலய பங்குத்தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் தலைமையில், புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி வளாகத்திலிருந்து புனித லூர்து அன்னை ஆலயம் வரை கிறிஸ்துவ மக்கள் தங்களது கைகளில் குருத்தோலைகளை ஏந்தி பாடல்களை பாடி ஊர்வலமாக ஆலயத்திற்குள் சென்றனர்.



தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தவ முயற்சிகளையும் உபவாசமும் மேற்கொண்டனர்.

இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுவதால் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வரை சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற உள்ளது என ஆலய பங்குத்தந்தை தெரிவித்தார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...