உடுமலையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஒசன்னா கீதம் பாடி பவனி வந்த கிறிஸ்தவர்கள்

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்ற பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா கீதம் பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயம் குருத்தோலை பவனி நடைபெற்றது.

இந்த பவனியில் திருச்சபை ஆயர்கள், மேரி செல்வராணி உதவி ஆயர் லூதர் சேகர், செயலாளர் பால் ஜெயசந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் , கிறிஸ்துநாதர் ஆலயம் ஆயர் செல்வராஜ், பொருளாளர் ராஜசேகரன்,



செயலாளர் வில்லிங்டன் ஜெபராஜ் மற்றும் திருச்சபை மக்கள், சேகரக்குழு உறுப்பினர்கள், பாடகர் குழுவினர் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கம், ஆண்கள் ஐக்கிய சங்கம், ஞாயிறு பள்ளி குழந்தைகள், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற பவனியில் கலந்து கொண்ட அனைவரும் ஓசன்னா கீதம் பாடி 2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து எருசலேம் நகர் வீதியில் வலம் வந்த நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...