வால்பாறையில் குறுத்தோலை ஞாயிறு தின விழா - குறுத்தோலை ஏந்தி பவனி வந்த கிறிஸ்தவர்கள்!

குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி வால்பாறையில் உள்ள பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள், கையில் குறுத்தோலை ஏந்தி, ஒசானா பாடல் பாடியபடி பவனி வந்தனர். கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய ஊர்வலம், சி.எஸ்.ஐ ஆலயத்தில் நிறைவடந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை அருகே குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குறுத்தோலை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களால் இன்று குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறையிலும் கிறிஸ்தவர்களால் குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டது.



அதன்படி வால்பாறையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் சி.எஸ்.ஐ மறை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இணைந்து கல்லூரி வளாகம் அருகே தங்களது குறுத்தோலை பவனியை தொடங்கினர்.



கையில் குறுத்தோலையை ஏந்தியபடி ஒசானா பாடல் மற்றும் இயேசுவின் தாசனே என்ற பாடலை பாடி பவனியாக சி.எஸ்.ஐ ஆலயம் வளாகம் வந்தனர். இதனையடுத்து, ஆலய ஆயர் பால் சுந்தர் சிங் தலைமையில் விசேஷ பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் வால்பாறை இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் ஆகியோர் தலைமையில், விசேஷ பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பவனியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருதய ஆலயத்தை அடைந்து குறுத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.



இதேபோல வால்பாறை அடுத்துள்ள முடிஸ் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்கு தந்தை மரிய ஆன்டணி தலைமையிலும் குறுத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது

Newsletter

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...