பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று திருகல்யாண உற்சவ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் நேற்றிரவு பல வகையான சீர் தட்டுகளுடன் 16 வகையான திரவியங்களால் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பட்டீஸ்வர பெருமானுக்கும், மரகதாம்பிகை அம்பாளுக்கும் பட்டாடை மற்றும் ஆபரணங்கள் சார்த்தப்பட்டு ஹோமங்கள் நடந்தன. பின்னர் மரகாம்பிகை அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டது. அதன் பிறகு பட்டீஸ்வர பெருமானும் மரகதாம்பினை அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனையடுத்து, பக்தர்கள் பாதநமஸ்காரம் செய்து திருக்கல்யாண மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் 22,692 ரூபாய் பக்தர்களால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...