பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று திருகல்யாண உற்சவ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் நேற்றிரவு பல வகையான சீர் தட்டுகளுடன் 16 வகையான திரவியங்களால் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பட்டீஸ்வர பெருமானுக்கும், மரகதாம்பிகை அம்பாளுக்கும் பட்டாடை மற்றும் ஆபரணங்கள் சார்த்தப்பட்டு ஹோமங்கள் நடந்தன. பின்னர் மரகாம்பிகை அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டது. அதன் பிறகு பட்டீஸ்வர பெருமானும் மரகதாம்பினை அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனையடுத்து, பக்தர்கள் பாதநமஸ்காரம் செய்து திருக்கல்யாண மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் 22,692 ரூபாய் பக்தர்களால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...