பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று திருகல்யாண உற்சவ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் நேற்றிரவு பல வகையான சீர் தட்டுகளுடன் 16 வகையான திரவியங்களால் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பட்டீஸ்வர பெருமானுக்கும், மரகதாம்பிகை அம்பாளுக்கும் பட்டாடை மற்றும் ஆபரணங்கள் சார்த்தப்பட்டு ஹோமங்கள் நடந்தன. பின்னர் மரகாம்பிகை அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டது. அதன் பிறகு பட்டீஸ்வர பெருமானும் மரகதாம்பினை அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனையடுத்து, பக்தர்கள் பாதநமஸ்காரம் செய்து திருக்கல்யாண மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் 22,692 ரூபாய் பக்தர்களால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...