தாராபுரம் உப்பாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நாளை தண்ணீர் திறப்பு!

தாராபுரம் அருகேயுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணை மூலம் சுமார் 6,060 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது உப்பாறு அணையில் இருந்து நாளை விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த தண்ணீர் திறப்பினால் சகுனிபாளையம், கெத்தல்ரேவ், வரப்பாளையம், நஞ்சிம்பாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும் தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டியும் விவசாயிகள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு உடனடியாக நாளை உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வலது மற்றும் இடது கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை இரண்டாம் தேதி முதல் வருகின்ற பத்தாம் தேதி வரை மொத்தம் 130.99 மில்லியன் கன அடி தண்ணீர் மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உப்பாறு அணையில் நாளை தண்ணீர் திறந்து விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...