தாராபுரம் உப்பாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நாளை தண்ணீர் திறப்பு!

தாராபுரம் அருகேயுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணை மூலம் சுமார் 6,060 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது உப்பாறு அணையில் இருந்து நாளை விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த தண்ணீர் திறப்பினால் சகுனிபாளையம், கெத்தல்ரேவ், வரப்பாளையம், நஞ்சிம்பாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும் தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டியும் விவசாயிகள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு உடனடியாக நாளை உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வலது மற்றும் இடது கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை இரண்டாம் தேதி முதல் வருகின்ற பத்தாம் தேதி வரை மொத்தம் 130.99 மில்லியன் கன அடி தண்ணீர் மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உப்பாறு அணையில் நாளை தண்ணீர் திறந்து விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...