தாராபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து நின்ற வாகனங்களை அகற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டு!

தாராபுரத்தில் அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புகார் எழுந்ததால் அந்த வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தாராபுரம் அருகேயுள்ள அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பரமசிவம் முன்னிலையில் காவல்துறையினர் தாராபுரம் மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிரடி நடவடிக்கையாக அவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, அண்ணா சிலையில் இருந்து பூக்கடை கார்னர் வரை பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்த கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினர்.



பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள தாராபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...