தாராபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து நின்ற வாகனங்களை அகற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டு!

தாராபுரத்தில் அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புகார் எழுந்ததால் அந்த வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தாராபுரம் அருகேயுள்ள அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பரமசிவம் முன்னிலையில் காவல்துறையினர் தாராபுரம் மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிரடி நடவடிக்கையாக அவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, அண்ணா சிலையில் இருந்து பூக்கடை கார்னர் வரை பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்த கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினர்.



பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள தாராபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...