மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது: கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை எனவும், மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது எனவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை ஈஷா யோக மையத்திற்கு நாளை பிரமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகயம்யையொட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அதிகாலை ரயில் மூலமாக கோவை வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக செய்த தனது தரப்பு தவறுகளை மறைக்கவே நேற்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளது. திமுக, அதிமுக என்ற இரண்டு கழகங்களினாலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் வராது. எந்த வழியை கடைபிடித்தாலும் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை வரப்போவதில்லை. இந்த இரு கழகங்களையும் ஒழிக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர். முதல்வர் தனது பொறுப்பை காப்பாற்ற செலுத்தும் கவனத்தை சுகாதாரம், விவசாயத்தின் மீதும் செலுத்த வேண்டும். வறட்சி, வெள்ளம், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு தான் முறைப்படி கேட்டு பெற வேண்டும்.

பல மாதங்களாக தமிழக அரசு செயல்படாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை. இத்திட்டம், முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம். மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது  ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க தற்போது சில எதிர்ப்புகள் வந்தாலும்  அந்த பிரச்சணைக்கு நீதிமன்ற வழக்கு மூலமாக தீர்வு காண வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் போது மட்டும் பிரச்சணைகளுக்கு உயிரோட்டம் தருவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...