தாராபுரத்தில் நீதிமன்றங்களைப் பார்வையிட்ட ஆதிதிராவிட நலத்துறை விடுதி மாணவிகள்!

தமிழகத்தில் முதல்முறையாக நீதிமன்ற செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில், தாராபுரத்தில் உள்ள நீதிமன்றங்களை ஆதிதிராவிட நலத்துறை விடுதி மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் தலைவர் சார்பு நீதிபதியான தர்ம பிரபு செய்திருந்தார்.


திருப்பூர்: தமிழகத்தில் இதுவரை சட்டசபை கூட்டத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சென்று பார்த்து வந்தனர்.தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தங்கும்விடுதியில் உள்ள 10,11,12ம் வகுப்பு மாணவிகள் உயர்கல்வியில் படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்,நீதிமன்ற செயல்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தாராபுரத்தில் உள்ள நீதிமன்றங்களை பார்வையிடஅனுமதி அளிக்கப்பட்டது.



அதன்பேரில் அரசு பள்ளி மாணவிகளின் 27 பேர் மற்றும் 3'வது மாவட்ட நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் ஒரு மணி நேரம் அமர்ந்து அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர்.



மேலும்,நீதிமன்றத்தை நேரில் சென்று பார்வையிட அனுமதி அளித்த வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதியான தர்ம பிரபுவுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.



இது குறித்து மாணவி ஷாலினி கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். என்னால் தினமும் பள்ளிக்கு சென்று பயிலாத முடியாத காரணத்தினால் நான் தாராபுரம் ஆதி திராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று பயின்று வருகிறேன்.

தற்போது, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். இந்த நிலையில், தாராபுரம் நீதிபதி எங்களை தாராபுரம் நீதிமன்ற செயல்பாடுகளை பார்க்க அனுமதி அளித்ததன் பேரில்,எங்கள் விடுதியில் உள்ள மாணவிகள் அனைவரும் நீதிமன்ற செயல்பாடுகளை பார்த்து தெரிந்துகொண்டோம். நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல அரசு கல்லூரியில் சேர்ந்து படித்து உயர்ந்த நிலைக்கு வருவேன், என்றார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...