வால்பாறையில் பசுவை அடித்துக் கொன்ற சிறுத்தை - தானியங்கி கேமிராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுவை சிறுத்தை அடித்துக்கொன்றது. அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் பகுதியில் சுப்பையா என்பவர் மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை மாடுகளை தேயிலை தோட்டத்தில் மேச்சலுக்கு விட்டுள்ளார்.

மாலை இரண்டு மாடுகள் மட்டும் வீட்டிற்கு வந்தன. ஒரு பசு மாடு வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து சுப்பையா மற்றும் உறவினர்கள், காணாமல் போன மாட்டை தேயிலை தோட்டத்தில் தேடினர். மாடு கிடைக்காததால், இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த முத்துராஜ் தலைமையிலான வனத்துறையினர், பசு மாட்டை தேடினர்.



அப்போது, காணாமல் மாட்டை சிறுத்தை கொன்று தேயிலை தோட்டத்தில் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, இறந்த மாட்டின் உடலை மீட்ட வனத்துறையினர், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...