வால்பாறையில் பசுவை அடித்துக் கொன்ற சிறுத்தை - தானியங்கி கேமிராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுவை சிறுத்தை அடித்துக்கொன்றது. அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் பகுதியில் சுப்பையா என்பவர் மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை மாடுகளை தேயிலை தோட்டத்தில் மேச்சலுக்கு விட்டுள்ளார்.

மாலை இரண்டு மாடுகள் மட்டும் வீட்டிற்கு வந்தன. ஒரு பசு மாடு வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து சுப்பையா மற்றும் உறவினர்கள், காணாமல் போன மாட்டை தேயிலை தோட்டத்தில் தேடினர். மாடு கிடைக்காததால், இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த முத்துராஜ் தலைமையிலான வனத்துறையினர், பசு மாட்டை தேடினர்.



அப்போது, காணாமல் மாட்டை சிறுத்தை கொன்று தேயிலை தோட்டத்தில் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, இறந்த மாட்டின் உடலை மீட்ட வனத்துறையினர், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...