கோவையில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் - ஒருவர் கைது, 2 பேர் தப்பியோட்டம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் பையில் சந்தனக் கட்டைகளுடன் சுற்றித்திரிந்த கும்பலை போலீசார் துரத்தியதில், சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய 2 பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலணி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையோடு மூன்று பேர் வந்துள்ளனர்.

போலீசார் நிற்பதைப் பார்த்த அவர்கள், அந்தப் பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

அவர்களை போலீசார் விரட்டியதில், ஒருவர் பிடிப்பட்டார். அந்த நபர் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது32) கூலி தொழிலாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் சந்தனமரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாரிமுத்துவை கைது செய்த போலீசர் 12 சந்தனமரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற விஜய், சசிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...