கொளுத்தும் கோடை - கோவையில் விறுவிறு விற்பனையில் குடிநீர் மண்பானைகள்!

கோவையில் கோடைவெப்பம் வாட்டி வதைத்துவரும் நிலையில், மக்கள் குளிர்ந்த தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துகொள்வதற்காக அதிக அளவில் மண்பானைகளை வாங்கத் தொடங்கியுள்ளதால், அதன் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.



வெளியில் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளனர். மேலும், உடல் சூட்டை குறைப்பதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழச்சாறுகள், கரும்புச்சாறு, இளநீர், பதநீர், கூழ் போன்றவற்றை தேடித்தேடி அருந்தத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவை முழுவதும் குளிர்பானக் கடைகள் காட்டுத்தீ போல பெருகிவிட்டன.



அதேநேரத்தில், குடிநீரை, குளிர்ச்சியான நீராகக் குடிக்கும் நோக்கில் தற்போது மக்களின் கவனம் மண்பானைகள் பக்கமும் திரும்பியுள்ளது. குளிர்சாதனப் பெட்டிகள் வீடுகளில் உள்ளபோதும், மண்பானை மூலம் இயற்கையான முறையில் கிடைக்கும் குளிர்ந்த நீரை பருகவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இதனால், கோவையில் பூமார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட குடிநீர்ப்பானைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பைப் பொருத்தப்பட்ட குடிநீர் மண்பானைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்த வகையான குடிநீர்ப் பானைகள் 400 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக மண் பானை வியாபாரி கூறுகையில், "வெயிலை சமாளிக்க, மண் பானை நீரை, மக்கள் அதிகம் குடித்து வருகின்றனர். மண்பானைகளால் சளி உட்பட உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்கள் மத்தியில் பிரபலமான களிமண் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்களும் இங்கு விற்பனைக்கு உள்ளது. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர், என்றார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...