உடுமலை அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் இல்லாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம்உடுமலையை அடுத்து உள்ளதிருமூர்த்தி அணையிலிருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர்திட்டத்தின் மூலம் முக்கோணம் , பூலாங்கிணறு , ராகல் பாவி, கணக்கம்பாளையம் கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல ஆண்டுகளாகக் குடிநீர் வசதி பெற்று வந்தனர்.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில்குடிநீர் வழங்கப்பட இல்லை என கூறப்படுகின்றது.



இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...