உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் வியாபார சான்று வழங்கல்!

உடுமலை நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், அவர்களுக்கு மத்திய அரசின் வியாபார சான்று இன்று வழங்கப்பட்டன. இந்த சான்றுகள் பெற்ற வியாபாரிகள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நகராட்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் வியாபார சான்று வழங்கப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த சாலையோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணிகளை முடிந்த நிலையில் மத்திய அரசால் வழங்கப்பட்ட வியாபார சான்று அனைவருக்கும் இன்று வழங்கப்பட்டது.

கணக்கெடுப்பில் அனைவருக்கும் நகராட்சி மூலம் புதிதாக அடையாள அட்டை மற்றும் வியாபார சான்று வழங்கப்பட உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள சாலையோர வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெங்கடகிருஷ்ணா வியாபார மண்டலங்களாக அறிவிக்கப்படும். பழைய நகராட்சி பள்ளி வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் விற்பனை ஒழுங்குமுறை) துணை விதிகளின்படி வியாபார மண்டலங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார மண்டலங்கள் அமைக்கப்படும் இடங்களின் அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் சதுர அடிக்கான ஆண்டு கட்டணம் மற்றும் குப்பைகள் அகற்றுதல் போன்ற பணிகளுக்கு மாத பராமரிப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படும்.

மேலும் வியாபார சான்று வழங்கப்பட்ட இடத்திற்கு மாறாகவும். போக்குவரத்திற்கு இடையூறாகவும் வியாபாரம் செய்யும் பட்சத்தில் வியாபார சான்று, நகர வியாபார குழுவால் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...