கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்..! - சிபிஐ கட்சியினர் வலியுறுத்தல்

மடத்துக்குளம் அடுத்த கணியூர் பகுதியில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர் விடுதி மற்றும் காவல்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது, ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, உரிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கவன ஈர்ப்பு தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில், தாலுகா செயலாளர் கு சவுந்திரராஜன், மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ரணதேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

பிரசாரத்தில் கணியூர் - காரத்தொழுவு சாலையில் மாணவர் விடுதி மற்றும் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் செயல்படுவதாக கூறப்படும் கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

போதிய இட வசதி உள்ள நிலையில் மருத்துவமனையை தரம் உயர்த்தவும், உரிய மருத்துவர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் பேருந்து போக்குவரத்து உரிய அளவில் இல்லாத நிலையில் மகளிருக்கு இலவச பயண திட்டம் பயனில்லாமல் போகிறது.

எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணியூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும். மாலை நேரங்களில் பொது இடங்கள், கோவில் பகுதிகளில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...