உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து மக்காச்சோளம், காய்கறிகள் சாகுபடிக்கு இறுதியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள், மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு ஆகியவை முக்கிய நீராதாரமாக உள்ளது.



இதன் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.



இதன் காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் தளி வாய்க்கால் மூலமாக ஏழு குளங்களை ஆதாரமாகக் கொண்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

இது தவிர பூலாங்கிணர், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை, கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் 3ஆம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள் சாகுபடி செய்து உள்ளனர். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு சுழற்சி முறையில் மூன்று சுற்று தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது, இறுதிச் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



அதன்படி காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 53.15 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 823 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 147 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...