அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? -தாராபுரம் தெருமுனை பிரச்சாரத்தில் சி.பி.எம் கேள்வி!

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. இப்பிரசாரத்திற்கு சிபிஎம் தாலூகா செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.

பிரச்சாரத்தின் போது நாட்டில் நிலவி வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீது தொடர் தாக்குதல், பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பிரச்சார இயக்கத்தின் போது கூட்டுக்களவாணிகளின் ஊழல் சாம்ராஜ்யம் குற்றவாளிக்கூண்டில் அதானி - மோடி பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், கண்ணுசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...