உடுமலை அருகே பாஜக சார்பில் மருத்துவ காப்பீட்டு முகாம் - 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு!

உடுமலை அடுத்த பூலாங்கிணறு அருகேயுள்ள கென்னடி நகர் பகுதியில் பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. கென்னடி நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, விவசாய அணி சமூக ஊடகப் பிரிவு தலைவர் மோகன் பிரசாத் தலைமை தாங்கினார்.



இந்த மருத்துவ காப்பீட்டு முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், விவசாய அணி மாநில செயலாளர் மௌனகுருசாமி, கிளை பொறுப்பாளர் சேகரன், ரங்கநாதன், லோகேஸ்வரன், உடுமலை மேற்கு ஒன்றிய ஆன்மீக பிரிவு தலைவர் திருமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்,

தொழில் பிரிவு நகர தலைவர் உடுமலை ராமராஜ், சின்ராஜ் கதிரவன் லோகேஷ் சித்தார்த் வேலுச்சாமி ராஜேஷ்குமார் சிவலிங்கம் மற்றும் பூலாங்கிணறு பாஜகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...