உடுமலை அருகே பாஜக சார்பில் மருத்துவ காப்பீட்டு முகாம் - 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு!

உடுமலை அடுத்த பூலாங்கிணறு அருகேயுள்ள கென்னடி நகர் பகுதியில் பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. கென்னடி நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, விவசாய அணி சமூக ஊடகப் பிரிவு தலைவர் மோகன் பிரசாத் தலைமை தாங்கினார்.



இந்த மருத்துவ காப்பீட்டு முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், விவசாய அணி மாநில செயலாளர் மௌனகுருசாமி, கிளை பொறுப்பாளர் சேகரன், ரங்கநாதன், லோகேஸ்வரன், உடுமலை மேற்கு ஒன்றிய ஆன்மீக பிரிவு தலைவர் திருமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்,

தொழில் பிரிவு நகர தலைவர் உடுமலை ராமராஜ், சின்ராஜ் கதிரவன் லோகேஷ் சித்தார்த் வேலுச்சாமி ராஜேஷ்குமார் சிவலிங்கம் மற்றும் பூலாங்கிணறு பாஜகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...