தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க புதிய வலைத்தளம் அறிமுகம்!

தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவும் வகையிலும், Block செய்யவும், கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட் போனை Unblock செய்யவும், மத்திய தொலை தொடர்புத்துறை சார்பில் CEIR என்ற புதிய வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



டெல்லி: தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவும் வகையில் CEIR என்ற புதிய வலைத்தளத்தை மத்திய தொலை தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றால் அது மிகையல்ல. ஸ்மார்ட்போன் என்பது, வெறும் அழைப்புகளை செய்வதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் பயன்படும் சாதனங்கள் அல்ல. ஸ்மார்ட் போன்கள் மூலம் தற்போதைய இணைய உலகில் எதை வேண்டுமானாலும் சாத்திய படுத்த முடியும்.

தற்போதய காலக்கட்டத்தில் மனிதர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்தால் தான் அவர் உயிருடன் இருப்பதாகவே எண்ணுகின்றனர். இவ்வாறு பயன்படும் ஸ்மார்ட்போன் தொலைந்து போவதோ அல்லது திருடப்படுவதோ மிகவும் மோசமான விஷயமாகும்.



இந்நிலையில் நீங்கள் தொலைத்த அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவியாக தொலைதொடர்புத் துறை சார்பில், மத்திய உபகரண அடையாள பதிவேடு (Central Equipment Identity Register - CEIR) என்ற பிரத்யேக வலைத்தள பக்கம் (Website) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



இந்த வலைத்தள பக்கத்தில் தொலைந்து போன ஸ்மார்ட்போனின் IMEI எண்ணுடன் புகார் அளித்தால், திருடப்பட்ட அல்லது தொலைந்த ஸ்மார்ட் போன்களை Block செய்யலாம். கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை Unblock செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போனை வாங்க போகிறீர்கள் என்றால் அந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்களைக் கண்டறிய இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...