உடுமலை சுற்றுவட்டாரத்தில் கன மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் காலை முதல் விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை மாற்றம், சீதேஷ்ண நிலை காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.



இந்நிலையில் இன்று காலை முதல் உடுமலை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்தது. தற்போது இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது,



வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே ஓரமாக நிறுத்தி மழையில் நனையாதபடி வணிக வளாகங்களில் தஞ்சமடைந்தனர். இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...