உடுமலையில் நெடுஞ்சாலை புளியமரங்களில் அறுவடை பணிகள் தீவிரம்!

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை சாலைகளின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான புளியமரங்களில் புளி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலை பகுதியின் முக்கிய சாலைகளில் உள்ள புளியமரங்களில் புளி அறுவடை துவக்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட பிரதான சாலைகள், கிராம இணைப்பு சாலைகளின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான புளியமரங்கள் உள்ளன.



ஆண்டுதோறும், பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறுவடை சீசன் துவங்கும். புளியமரங்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, புளி, பறிப்பதற்கான ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டு சீசன் துவங்கியுள்ள நிலையில், சாலையோர மரங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது.



கடந்தாண்டு, பருவமழை அதிகரித்ததால், காய் உருவாகும் சமயத்தில் பெய்த மழை காரணமாக, மகசூல் குறைந்தது. தற்போது சீசன் காரணமாக, வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. விதையுடன் கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

புளியம் பழங்களை தரம் பிரித்து, விற்பனை செய்யும் போது கூடுதல் விலை கிடைக்கிறது. கிராமங்களில், இத்தகைய பணிகளில் பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர்.

பழத்திலுள்ள கொட்டை மற்றும் நார் ஆகியவற்றை பிரித்து, விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...