உடுமலையில் தனியார் அறக்கட்டளை சார்பில் 2 நாள் இலவச நீட் பயிற்சி!

உடுமலையில் ‌லெப்டினெட் சுபாஷ், ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் நீட் மற்றும் ராணுவ தேர்வுக்கான இலவச பயிற்சிகள் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலையில் லெப்டினெட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் நீட் மற்றும் ராணுவ தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் லெப்டினெட் சுபாஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில வருடங்களுக்கு இவர் முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவர், அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் பலரையும் ராணுவத்தில் சேர்த்து பணியாற்ற ஊக்கப்படுத்தி வந்ததோடு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தார்.



இந்த நிலையில் தனது மகனின் நினைவாக தந்தை கே.ஆர் செல்வராஜ் நூலகம், வகுப்பறை என பல்வேறு வசதிகளோடு அனுபவமிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், சமூக செயல்பாட்டாளர்கள் என சமூக அக்கறை கொண்டவர்களின் ஆலோசனைகளோடும் தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகள், காவல்துறை மற்றும் ராணுவத்தில் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்.



மேலும் பள்ளி மாணவர்களின் ஆளுமை வளர்க்கும் வகையில் ஓவியம், சிலம்பம், பேச்சுத்திறமை, யோகா பயிற்சி மற்றும் கணிதம், அறிவியல் என பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.



தற்போது மருத்துவம் பயில ஆர்வமும், ஆற்றலும் இருந்தும் நீட் தேர்வை எழுத முன் பயிற்சி பெற இயலாத மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

உடுமலை பகுதியிலிருந்து பல மருத்துவ மாணவர்களை உருவாக்கிய அனுபவமிக்க ஆசிரியர்கள், மிக தரமான பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாண-மாணவிகள் பயிற்சி பெற முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாண-மாணவிகள் பயிற்சி பெற விரும்பினால், பயிற்சி கட்டணத்தை அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும். மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறக்கட்டளை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...