தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தல் - பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே அமராவதி ஆற்றின் கரையிலிருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்களை இரவு நேரங்களில் வெட்டி கடத்திச் செல்லும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் கரையிலிருந்த மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலங்கியம் அருகே அமராவதி ஆற்றின் கரையோர பகுதியின் இரு புறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளிய மரம், சவுக்கு, தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரக்கன்றுகளை வனத்துறையினர் நட்டுப் பராமரித்து வந்தனர்.



இந்நிலையில் கூடுதுறை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் செழித்து வளர்ந்திருந்த மரங்களை கடந்த 6 மாதமாக மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, அலங்கியம் அமராவதி ஆற்றுப்படுகையில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது. இதனை வனத்துறை அதிகாரிகள் தடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி கூறியதாவது, மரங்கள் வெட்டப்பட்டது உண்மை தான். யார் வெட்டி செல்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. பொதுமக்கள் தரப்பில் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் வரை இருக்கும்.

இதுகுறித்து வனத்துறையினரின் அறிக்கை பெற்ற பின்னர், தான் வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும். அவர்கள் கூறிய பிறகு தான் மரங்களை வெட்டியவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...