தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தல் - பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே அமராவதி ஆற்றின் கரையிலிருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்களை இரவு நேரங்களில் வெட்டி கடத்திச் செல்லும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் கரையிலிருந்த மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலங்கியம் அருகே அமராவதி ஆற்றின் கரையோர பகுதியின் இரு புறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளிய மரம், சவுக்கு, தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரக்கன்றுகளை வனத்துறையினர் நட்டுப் பராமரித்து வந்தனர்.



இந்நிலையில் கூடுதுறை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் செழித்து வளர்ந்திருந்த மரங்களை கடந்த 6 மாதமாக மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, அலங்கியம் அமராவதி ஆற்றுப்படுகையில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது. இதனை வனத்துறை அதிகாரிகள் தடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி கூறியதாவது, மரங்கள் வெட்டப்பட்டது உண்மை தான். யார் வெட்டி செல்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. பொதுமக்கள் தரப்பில் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் வரை இருக்கும்.

இதுகுறித்து வனத்துறையினரின் அறிக்கை பெற்ற பின்னர், தான் வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும். அவர்கள் கூறிய பிறகு தான் மரங்களை வெட்டியவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...