தாராபுரம் நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்!

தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையின் 2 ஓரங்களிலும் முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் சாலையோரங்களில் முறையற்று நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தாராபுரம் நகரின் மையப் பகுதியான பூக்கடை கார்னர் பகுதியில் இருந்து உடுமலை ரோடு, கரூர் ரோடு, ஜவுளி கடை வீதி, வசந்த ரோடு ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் எந்த பக்கம் பார்த்தாலும் சாலையின் இரண்டு ஓரங்களிலும் முறையற்ற முறையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சில வாடிக்கையாளர்கள் வணிக நிறுவனங்களுக்குள் தனது வேலை நிமித்தமாக செல்கின்றனர்.



சாலை ஓரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் இரவு நேரங்களில் சாலையில் வாகனம் செல்வதற்கு வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி விபத்துக்கள் ஏற்படவும் அதிக அளவில் வாய்ப்புள்ளது.



மேலும், அரசு டவுன் பூக்கடை கார்னரில் இருந்து உடுமலை ரோடு செல்லும் வரை அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேருந்துகள் செல்ல முடியாமல் தினந்தோறும் திணறிய வண்ணம் உள்ளது. இதே நிலை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.

எனவே சாலையில் இரண்டு ஓரங்களிலும் முறையற்று நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை ஏதாவது சாலையில் ஒருபுறமாக நிறுத்தினால் வாகன நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...