பொள்ளாச்சி அருகே கோவிலை அப்புறப்படுத்தும் நோட்டீசை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

பொள்ளாச்சி அண்ணா நகர் அருகேயுள்ள கருப்பராயன் கன்னிமார் கோவிலை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கண்டித்து கோவில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோவிலை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீஸை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த அண்ணா நகர் பகுதியில் இருந்து கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் பழமையான கருப்பராயன் கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகாலமாக கோவிலில் அங்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோவிலை அப்புறப்படுத்த கோரி, நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் கோவிலை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை கண்டித்து பூசாரி சந்திரன் கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் திரண்டு பஜனை பாடல்களை பாடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கருப்பராயன் கன்னிமார் கோயில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மரத்தடியின் கீழே இருந்தது கோவிலுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கோவில் அருகேயுள்ள தனியார் லே-அவுட் உரிமையாளர் வழித்தடம் வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டு கோவிலை அப்புறப்படுத்த கூறியதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் கோவிலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...