பொள்ளாச்சி அருகே கோவிலை அப்புறப்படுத்தும் நோட்டீசை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

பொள்ளாச்சி அண்ணா நகர் அருகேயுள்ள கருப்பராயன் கன்னிமார் கோவிலை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கண்டித்து கோவில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோவிலை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீஸை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த அண்ணா நகர் பகுதியில் இருந்து கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் பழமையான கருப்பராயன் கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகாலமாக கோவிலில் அங்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோவிலை அப்புறப்படுத்த கோரி, நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் கோவிலை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை கண்டித்து பூசாரி சந்திரன் கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் திரண்டு பஜனை பாடல்களை பாடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கருப்பராயன் கன்னிமார் கோயில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மரத்தடியின் கீழே இருந்தது கோவிலுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கோவில் அருகேயுள்ள தனியார் லே-அவுட் உரிமையாளர் வழித்தடம் வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டு கோவிலை அப்புறப்படுத்த கூறியதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் கோவிலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...