உடுமலையில் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்!

உடுமலை - பழனி சாலையில் உள்ள சன் ஹோட்டலில் நடைபெற்ற வட்ட சட்டபணிகள் குழு சார்பிலான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி, உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கேர் டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



உடுமலை - பழனி சாலையில் அமைந்துள்ள சன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த சட்ட கருத்துரைகளை வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், சத்தியவாணி, மகாலட்சுமி, தம்பி பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.



இதில், கேர் டி நிறுவன ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் மக்களமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின், கேர் டி நிறுவனத்தின் பஞ்சாலை பயிற்சியாளர் லீனா ஜஸ்டின், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் முதியோர் உதவி எண்ணின் மாவட்ட களப்பொறுப்பு அலுவலர் மைதிலி, சார்க்.டிரஸ்ட் தலைவர் சாமிநாதன் துரை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஆணைய பணியாளர்கள் மற்றும் தீபம் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...