ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியதை கண்டித்து துடியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவை துடியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: ராகுல் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டதை கண்டித்து கோவை மாவட்டம் துடியலூர் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் பாஜகவினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அகில இந்திய காங்கிரஸ் கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் ஆலோசனை படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் மாவட்ட தலைவர் பி.வி.மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, துடியலூர் சர்கிள் தலைவர் சுரேந்திர பாபு, கவுண்டம்பாளையம் சர்கிள் தலைவர் நாகராஜ், எஸ்.எஸ்.குளம் வட்டார தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு துணை புரிந்ததாக பாஜக கட்சி மற்றும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பபினர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி தொகுதி தலைவர் சூர்யபிரகாஷ், பார்த்திபன், சதீஷ்குமார், சசிகுமார், அசோக், சிங்காரவேலு, மருதகிரி ராஜேந்திரன், ஜே.வி.எஸ் மணி, கார்த்தி, வைகை ரஃபிக், மனோகர், ஜனார்த்தன நாயுடு, அசோகன், தம்பி பார்த்திபன், பழனிச்சாமி, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...