ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியதை கண்டித்து துடியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவை துடியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: ராகுல் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டதை கண்டித்து கோவை மாவட்டம் துடியலூர் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் பாஜகவினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அகில இந்திய காங்கிரஸ் கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் ஆலோசனை படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் மாவட்ட தலைவர் பி.வி.மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, துடியலூர் சர்கிள் தலைவர் சுரேந்திர பாபு, கவுண்டம்பாளையம் சர்கிள் தலைவர் நாகராஜ், எஸ்.எஸ்.குளம் வட்டார தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு துணை புரிந்ததாக பாஜக கட்சி மற்றும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பபினர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி தொகுதி தலைவர் சூர்யபிரகாஷ், பார்த்திபன், சதீஷ்குமார், சசிகுமார், அசோக், சிங்காரவேலு, மருதகிரி ராஜேந்திரன், ஜே.வி.எஸ் மணி, கார்த்தி, வைகை ரஃபிக், மனோகர், ஜனார்த்தன நாயுடு, அசோகன், தம்பி பார்த்திபன், பழனிச்சாமி, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...