கோவையில் கூலிப்படையை ஏவி இளைஞரைக் கொன்ற நண்பன் - அடமானம் வைத்த காரை திருப்பாததால் வெறிச்செயல்

கோவையில் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி திருப்பி தராத ஆத்திரத்தில், சோமையம்பாளையத்தை சேர்ந்த அஷ்வின், கூவிப்படையை மூலம் நண்பர் சிரஞ்சீவியை தாக்கியுள்ளார். சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி, உயிரிழந்த நிலையில், அஷ்வின் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது23).



இவர் தனது நண்பரான அஷ்வின் என்பவரிடம் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி இருந்தார். ஆனால், சிரஞ்சீவி பணத்தை திருப்பி கொடுத்து காரை திருப்பாமல் இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து அஷ்வின் பலமுறை கேட்டும் சிரஞ்சீவி பணத்தை திருப்பி செலுத்ததாமல் இருந்த நிலையில், அஷ்வின் நெல்லையில் இருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளார்.

சஞ்சீவி நேற்றுமுன் மருதமலை சாலையில் சென்றபோது கூலிப்படையினர் சிரஞ்சீவி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த சிரஞ்சீவி சுயநினைவில்லாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவம் குறித்து சிரஞ்சீவியின் தந்தை பாலமுருகன் வடவள்ளி காவல் துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் சிரஞ்சீவியின் நண்பர் அஷ்வின் கூலிபடையை ஏவி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அஷ்வின் மற்றும் நெல்லையை சேர்ந்த கண்ணன், முத்தையா, ஆனந்த்பாபு ஆகிய 4 பேரை கைது செய்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...