உடுமலை ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு

உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி சாலையில் ஊர்காவல்படை அலுவலகம் இயங்கி வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும், இந்த அலுவலகம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் இன்று அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை நகராட்சிக்கு கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்த ஊர்காவல்படை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீசாருக்கு உதவும் வகையில், ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. இரு தாலுகாவிலும், 60-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை உள்ள நிலையில், அவர்களுக்கான அலுவலகம், 20 ஆண்டுக்கும் மேலாக, நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு, மாதம்தோறும் ஊர்க்காவல் படையினருக்கு எஸ் பி அலுவலகத்திலிருந்து வாடகை தொகை மற்றும் செலவினங்களும் வழங்கப்படும். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வாடகைத் தொகை 6 ஆண்டாக வாடகை மற்றும் அலுவலக செலவினங்கள் நிதி ஒதுக்கபடாததால் வாடகை நிலுவை வைக்கப்பட்டது.



இதனால், நகராட்சி அதிகாரிகள் அலுவலகத்தை மூடி, 'சீல்' வைத்தனர். இதனால், ஊர்க்காவல் படை வீரர்கள் குறித்த ஆவணங்கள், உதவித்தொகைக்கான பில், ரசீதுகள் அனைத்தும் அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில், மாதம் தோறும் ஊர்காவல் படையினருக்கு உதவித் தொகைக்கான பில் கூட எழுத முடியாமல், தவித்து வருகின்றனர்.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கான வாடகை, செலவினங்கள் ஒதுக்கீடு செய்யவும், ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களுக்குரிய மாத உதவிதொகை மற்றும் பணியாற்றிய காலத்திற்கான சிறப்பு தொகை வழங்க, எஸ்.பி., மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவல்படை வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...