உடுமலை ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு

உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி சாலையில் ஊர்காவல்படை அலுவலகம் இயங்கி வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும், இந்த அலுவலகம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் இன்று அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை நகராட்சிக்கு கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்த ஊர்காவல்படை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீசாருக்கு உதவும் வகையில், ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. இரு தாலுகாவிலும், 60-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை உள்ள நிலையில், அவர்களுக்கான அலுவலகம், 20 ஆண்டுக்கும் மேலாக, நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு, மாதம்தோறும் ஊர்க்காவல் படையினருக்கு எஸ் பி அலுவலகத்திலிருந்து வாடகை தொகை மற்றும் செலவினங்களும் வழங்கப்படும். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வாடகைத் தொகை 6 ஆண்டாக வாடகை மற்றும் அலுவலக செலவினங்கள் நிதி ஒதுக்கபடாததால் வாடகை நிலுவை வைக்கப்பட்டது.



இதனால், நகராட்சி அதிகாரிகள் அலுவலகத்தை மூடி, 'சீல்' வைத்தனர். இதனால், ஊர்க்காவல் படை வீரர்கள் குறித்த ஆவணங்கள், உதவித்தொகைக்கான பில், ரசீதுகள் அனைத்தும் அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில், மாதம் தோறும் ஊர்காவல் படையினருக்கு உதவித் தொகைக்கான பில் கூட எழுத முடியாமல், தவித்து வருகின்றனர்.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கான வாடகை, செலவினங்கள் ஒதுக்கீடு செய்யவும், ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களுக்குரிய மாத உதவிதொகை மற்றும் பணியாற்றிய காலத்திற்கான சிறப்பு தொகை வழங்க, எஸ்.பி., மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவல்படை வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...