உடுமலை ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு

உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி சாலையில் ஊர்காவல்படை அலுவலகம் இயங்கி வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும், இந்த அலுவலகம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் இன்று அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை நகராட்சிக்கு கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்த ஊர்காவல்படை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீசாருக்கு உதவும் வகையில், ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. இரு தாலுகாவிலும், 60-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை உள்ள நிலையில், அவர்களுக்கான அலுவலகம், 20 ஆண்டுக்கும் மேலாக, நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு, மாதம்தோறும் ஊர்க்காவல் படையினருக்கு எஸ் பி அலுவலகத்திலிருந்து வாடகை தொகை மற்றும் செலவினங்களும் வழங்கப்படும். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வாடகைத் தொகை 6 ஆண்டாக வாடகை மற்றும் அலுவலக செலவினங்கள் நிதி ஒதுக்கபடாததால் வாடகை நிலுவை வைக்கப்பட்டது.



இதனால், நகராட்சி அதிகாரிகள் அலுவலகத்தை மூடி, 'சீல்' வைத்தனர். இதனால், ஊர்க்காவல் படை வீரர்கள் குறித்த ஆவணங்கள், உதவித்தொகைக்கான பில், ரசீதுகள் அனைத்தும் அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில், மாதம் தோறும் ஊர்காவல் படையினருக்கு உதவித் தொகைக்கான பில் கூட எழுத முடியாமல், தவித்து வருகின்றனர்.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கான வாடகை, செலவினங்கள் ஒதுக்கீடு செய்யவும், ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களுக்குரிய மாத உதவிதொகை மற்றும் பணியாற்றிய காலத்திற்கான சிறப்பு தொகை வழங்க, எஸ்.பி., மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவல்படை வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...