பொள்ளாச்சி ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பரிவார குடைகள் - திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை அன்பளிப்பு

பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், 42 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட பரிவாரக் குடைகள், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் போது, ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.



கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேதர் ஜோதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.



இக்கோவிலுக்கு பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் பொழுது பயன்படுத்தப்படும் பரிவாரக் குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடம் யூஜ்ய ஸ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை, சுவாமி விவேகாந்தா கலை நற்பணி மன்ற நிர்வாகிகள், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரூ 42 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பரிவார குடைகளை கோயில் அர்ச்சர்கள்களிடம் வழங்கினர்.

பிரதோஷம், மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் திருவீதி உலா வரும்போது இந்த பரிவாரக் குடைகள் ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...