வால்பாறையில் ஆதிவாசி கிராமங்களுக்கு தார்ச்சாலை - பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

மக்களின் கோரிக்கையை ஏற்று, வால்பாறை நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது.


கோவை: வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஓரிரு கிராமங்கள் சாலை அமைக்க ஏற்ற இடமாக உள்ளது.

வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் வனப்பகுதிக்குள் நெடுகுன்றம் செட்டில்மெண்டு உள்ளது. அங்கு சுமார் 60 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் வால்பாறைக்கு வருவதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து வர வேண்டும்.



வனப்பகுதியில் ஏற்கனவே மண் சாலை இருந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.



இதற்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் எஸ். அழகு சுந்தரவள்ளி மற்றும் 5வது வார்டு உறுப்பினர் M.கவிதா மற்றும் நகரமன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியவாணிமுத்து, அன்பரசன், பாஸ்கர், மணிகண்டன் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் மற்றும் நெடுங்குன்றம் முப்பர் ரத்தினசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...