வால்பாறையில் ஆதிவாசி கிராமங்களுக்கு தார்ச்சாலை - பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

மக்களின் கோரிக்கையை ஏற்று, வால்பாறை நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது.


கோவை: வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஓரிரு கிராமங்கள் சாலை அமைக்க ஏற்ற இடமாக உள்ளது.

வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் வனப்பகுதிக்குள் நெடுகுன்றம் செட்டில்மெண்டு உள்ளது. அங்கு சுமார் 60 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் வால்பாறைக்கு வருவதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து வர வேண்டும்.



வனப்பகுதியில் ஏற்கனவே மண் சாலை இருந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.



இதற்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் எஸ். அழகு சுந்தரவள்ளி மற்றும் 5வது வார்டு உறுப்பினர் M.கவிதா மற்றும் நகரமன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியவாணிமுத்து, அன்பரசன், பாஸ்கர், மணிகண்டன் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் மற்றும் நெடுங்குன்றம் முப்பர் ரத்தினசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...