திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்!

சிபிஎஸ்ஐ ரத்து மற்றும் அகவிலைப்படி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.



இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி சிபிஎஸ்ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், முடக்கப்பட்ட ஒப்புடைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



இந்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...